states

img

பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

மீரட்,செப்.23- பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரிடமிருந்து சிறுமியை குரங்கு கூட்டம் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் அருகேயுள்ள பக்பத் கிராமத்தில் சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் சிறுமியை கடத்தி அருகில் யாரும் இல்லாத இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குரங்கு கூட்டம் அந்த நபர் மீது பாய்ந்து தாக்கியது உடனே அந்த நபர் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளார்.
அந்த நபர் சிறுமியை தூக்கிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.